சினிமா செய்திகள்

ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்...

நிகழ்ச்சி ஒன்றில் அசலத்தான தகவலை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

சென்னை,

ரஜினியின் ''படையப்பா'' திரைப்படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்த நிலையில் விரைவில் ரீ-ரிலீசுக்கு தயாராக உள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் அசலத்தான தகவலை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

குறிப்பாக படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தேவையான ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் வீடியோகள் எச்.டி. தரத்தில் டிஜிட்டலுக்கு மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தயார்படுத்தப்பட்டு வருதாகவும் கூறினார்.

அது மட்டும் இல்லாமல், ரஜினி மற்றும் கமலை இணைத்து படம் இயக்க தயாராக இருக்கிறதாக புது தகவலை சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.

SCROLL FOR NEXT