சென்னை,
கவிஞர் வைரமுத்து, நாளை (சனிக்கிழமை) திருப்பூரில் நடைபெறும் சுழற்சங்க மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”நாளை சனிக்கிழமை திருப்பூர் வருகிறேன். ஈராயிரம்பேர் கூடும் சுழற்சங்க மாநாட்டில் உரையாற்றுகிறேன்.
நேரம் மாலை 4 மணி தலைப்பு அறிவை விரிவுசெய். தமிழ் என்பது அலங்காரப் பொருள் அல்ல; ஆக்கப் பொருள் என்று காட்டி எங்கள் தமிழ் மக்களை உயர்த்தும் உரையாக அது திகழவேண்டும் என்பது தீராத ஆசை.
ஆசை மெய்ப்பட வாழ்த்துங்கள். ஊர்கூடிச் சிந்திப்போம்; திருப்பூரில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.