சினிமா செய்திகள்

இந்தி படத்தில் நாயகனாக மஹத்

அஜித்குமாரின் ‘மங்காத்தா’ படத்தில் நடித்த நடிகர் மஹத் ராகவேந்திராவும் ‘டபுள்எக்ஸ்எல்’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார்.

தினத்தந்தி

தென் இந்திய நடிகர்-நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். இந்த வரிசையில் தமிழில் அஜித்குமாரின் 'மங்காத்தா' படத்திலும், 'பிரியாணி' 'சென்னை-28' இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமான மஹத் ராகவேந்திராவும் 'டபுள்எக்ஸ்எல்' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ஜாகீர் இக்பால் இன்னொரு நாயகனாக வருகிறார். ஹீமா குரேஷி, சோனாக்சி சின்ஹா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்ரம் ரமணி இயக்குகிறார். மஹத் ராகவேந்திரா கூறும்போது, "தமிழ் படங்களில் 10 வருடங்களாக நடித்து வருகிறேன். எனக்கு நீண்டகாலமாக இந்தி படவாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. ஆனால் இந்த கதை இதயத்தை உருக்கும் அற்புதமான கதையாக இருந்ததால் நடிக்கிறேன். கண்மூடித்தனமாக நம்பும், அழகு எனும் மாயையை கேள்வி கேட்கும் படமாக இது இருக்கும்" என்றார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை