சினிமா செய்திகள்

சத்யராஜின் 3-வது இந்தி படம் - ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்த 'முஞ்யா'

ஹாரர் காமெடி படமாக உருவான "முஞ்யா" வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தினத்தந்தி

மும்பை,

பிரபல பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சர்போதார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தி படம் "முஞ்யா". இதில், ஷர்வரி வாக், அபய் வர்மா, மோனா சிங் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஹாரர் காமெடி படமாக உருவான "முஞ்யா" வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இப்படம் வெளியாகி 3 வாரங்களை கடந்துள்ளநிலையில், ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "முஞ்யா' அனைவரின் இதயங்களிலும் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது," என்று பதிவிட்டு படம் வெளியான 18 நாட்களில் ரூ.105.95 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சத்யராஜ் முன்னதாக இந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ராதேஷ்யாம் படங்களில் நடித்திருந்தார். தற்போது நடித்துள்ள "முஞ்யா" இவருக்கு 3-வது இந்தி படமாகும்.

View this post on Instagram

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை