சினிமா செய்திகள்

சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

‘சஞ்சய் லீலா பன்சாலி’ படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.13 கோடிக்கு மேல் கேட்பதாகவும், கேட்ட சம்பளத்தை கொடுக்க படக்குழுவினர் தயாராக இருப்பதாகவும் இந்தி பட உலகினர் பேசுகிறார்கள்.

தினத்தந்தி

தமிழ் திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஷாருக்கானின் 'ஜவான்' படம் மூலம் இந்திக்கும் போய் இருக்கிறார். 'ஜவான்' படம் ரூ.1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தி திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. நயன்தாரா நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன.

'ஜவான்' படத்தால் நயன்தாராவுக்கு இந்தி பட உலகில் மவுசு கூடி உள்ளது. முன்னணி இந்தி நடிகர்கள் பலரும் தங்களுக்கு ஜோடியாக்க ஆர்வம் காட்டுகின்றனர். புகழ்பெற்ற இந்தி இயக்குனரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி பெரிய பட்ஜெட்டில் எடுக்க உள்ள பைஜூ பாவ்ரா என்ற படத்தில் ரன்பீர் கபூர், அலியாபட் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தில் நயன்தாராவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 'ஜவான்' படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் பெற்றதாகவும், 'சஞ்சய் லீலா பன்சாலி' படத்தில் நடிக்க ரூ.13 கோடிக்கு மேல் கேட்பதாகவும், நயன்தாரா கேட்ட சம்பளத்தை கொடுக்க படக்குழுவினர் தயாராக இருப்பதாகவும் இந்தி பட உலகினர் பேசுகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்