சினிமா செய்திகள்

மோனலிசா கணவர் மீது பாய்ந்த போக்சோ

உத்தரப் பிரதேசத்தின் கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் பேமஸானவர்தான் மோனலிசா.

சென்னை,

கும்பமேளாவில் புகழ்பெற்ற மோனாலிசா ஒரு மைனர் என்பது விசாரணையில் உறுதியானதையடுத்து, அவரது கணவர் பர்மான் கான் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் ஆய்வில் மோனாலிசா 2009-ல் பிறந்தவர் என்பதும், திருமணத்திற்காக வயது சான்றிதழ்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆவண மோசடி தொடர்பாக மத்தியப் பிரதேச போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் பேமஸானவர்தான் மோனாலிசா. இவருக்கும், கேரளாவை சேர்ந்த பர்மான்கான் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.