சினிமா செய்திகள்

அதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார்

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவில் வீட்டின் முன்னால் ரசிகர்கள் திரண்டு நின்றனர்.

தினத்தந்தி

நடிகர் ஷாருக்கான் சில நிமிடங்கள் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். ரசிகர்கள் குவிந்ததால் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பின்னர் தனது பிறந்தநாள் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த ஷாருக்கான், மனைவிக்கு கேட் ஊட்டி விட்டேன். குழந்தைகளுடன் விளையாடினேன். ரசிகர் குடும்பங்களை சந்தித்தேன். மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைந்தது என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகு தனது வீட்டின் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் மற்றும் தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

இந்தி நடிகர்நடிகைகளை விருந்துக்கு அழைத்து இருந்தார். இதில் அமீர்கான், மாதவன், கரண் ஜோஹர், கரீனா கபூர், கத்ரினா கைப், அலியா பட், டாப்சி, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்து பயங்கர இசை சத்தத்துடன் அதிகாலை 3 மணிவரை நடந்தது.

இது அக்கம்பக்கத்தினருக்கு தொல்லையாக இருந்ததால் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து விருந்தை முடித்து விட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். ஓட்டல் நிர்வாகத்தினரையும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். மற்ற நடிகர் நடிகைகளும் கிளம்பி சென்றனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை