சினிமா செய்திகள்

நடிகர் ரகுவரன் குறித்து அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி புகார்

நடிகர் ரகுவரன் குறித்து அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் புகார் அளித்து உள்ளார்.

சென்னை

முன்னாள் முதல்வர்கள் பெயரிலும், பெண் நிருபர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏற்கனவே கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னைப்பற்றியும், மறைந்து கணவர் ரகுவரனையும் பற்றி வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.