சினிமா செய்திகள்

விவாகரத்து, மயோசிடிஸ் நோய்க்கு பிறகான வாழ்க்கை குறித்து பேசிய சமந்தா

முன்பை விட தற்போது ஆன்மிகம் அதிகம் தேவைப்படுவதாக சமந்தா கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகை சமந்தா, நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். மேலும், மயோசிடிஸ் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் குணமாகி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், விவாகரத்து, மயோசிடிஸ் நோய்க்கு பிறகான வாழ்க்கை குறித்து சமந்தா பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

'நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற விரும்புகிறோம். என்னிடம் இருந்த விஷயங்களை நான் கடந்து வந்திருப்பதை சில நேரங்களில் நினைத்து பார்ப்பேன். ஆனால், வேறு வழியில்லை. கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். இதை பற்றி என் நண்பரிடம் பேசியிருக்கிறேன்.

வாழ்க்கை நமக்கு அனைத்தையும் சமாளிக்க கற்றுத்தருகிறது. இப்போது நான் வலுவாக இருக்கிறேன். அதற்கு ஆன்மிக ஈடுபாடுதான் காரணம் . இன்றைய உலகில், முன்பை விட ஆன்மிகம் அதிகம் தேவைப்படுகிறது. ஏனென்றால் தற்போது நோயும், வலியும் அதிகமாக உள்ளது,'என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து