சினிமா செய்திகள்

திகில் கதையில் சமுத்திரக்கனி

தினத்தந்தி

நந்தா பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் தயாராகிறது. இதில் சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சின்னி ஜெயந்த் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக பரபரப்பான திகில் கதையம்சத்தில் இந்தப் படம் தயாராவதாக டைரக்டர் தெரிவித்தார்.

சமுத்திரக்கனி கதையை கேட்டதும் மொத்தமாக தேதிகள் ஒதுக்கி படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடிப்பதாகவும் அவர் கூறினார். கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடிய உள்ளது. இந்தப் படத்துக்கு சீதாராமம் புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சினேகன், ராஜுமுருகன், இளங்கோ கிருஷ்ணன் பாடல்கள் எழுதுகின்றனர். ஒளிப்பதிவு: சுகுமார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்