image courtecy:instagram@sayyeshaa 
சினிமா செய்திகள்

மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் சாயிஷா

சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

தினத்தந்தி

சென்னை,

நடிகை சாயிஷா தெலுங்கு படமான 'அகில்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். பிறகு, அஜய் தேவ்கானின் 'சிவாய்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'வனமகன்' படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாயிஷா.

மேலும் தமிழில் இவர், 'கடைக்குட்டி சிங்கம்,' 'ஜுங்கா,' 'கஜினிகாந்த்,' 'காப்பான்', 'டெடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். பின்னர், நடிகர் ஆர்யாவை 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அரியானா என்ற மகள் இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்த இவர், சிறிய இடைவெளிக்கு பிறகு 'பத்து தல' படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டார். இதில், அவரது நடனம் பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகை சாயிஷா மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது ரீ-எண்ட்ரியை எதிர்பார்ப்பதாக ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து