சினிமா செய்திகள்

சாந்தனு பாக்யராஜ், சீமான் நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” படத்தின் மோஷன் வீடியோ வெளியீடு

சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் சீமான், ஷாந்தனு நடிப்பில் உருவான ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘ஒரு கைதியின் டைரி’எனப் பெயரிடப்பட்டு, அதன் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கண்ணன் ரவி தயாரிப்பில் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார்.

திரைப்படத்தின் மோஷன் வீடியோ வெளியீடு

தயாரிப்பு நிறுவனமான கேஆர்ஜி குரூப்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது. “ஒரு மனிதன், ஒரு கதை, ஒரு சகாப்தம். இதுவே ஒரு கைதியின் டைரி” என்ற அழுத்தமான வரிகளுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளது.

சுசீந்திரன் - சாந்தனு-சீமான் கூட்டணி

‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’ போன்ற யதார்த்தமான மற்றும் விறுவிறுப்பான கதைகளை இயக்கி தனக்கென ஒரு முத்திரை பதித்த இயக்குனர் சுசீந்திரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜும், மிக முக்கிய ஆளுமையான சீமானும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களின் கூட்டணி திரையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆர்வம் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகக் கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தலைப்பால் ஈர்க்கப்பட்ட பழைய நினைவு

1985-ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், பாக்யராஜ் கதையமைப்பில் வெளியான மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் தலைப்புதான் ‘ஒரு கைதியின் டைரி’. தற்போது அதே தலைப்பை பாக்யராஜின் மகனான சாந்தனு நடிக்கும் படத்திற்குப் பயன்படுத்தியிருப்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய படத்திற்கும் இதற்கும் கதைக்கள ரீதியாக ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதும் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.