சினிமா செய்திகள்

"முகப்பருவால் முகம் காட்டவே பயந்தேன்" - மனம் திறந்த நடிகை

மனநிலையை ஆழமாக பாதிக்கும் என்று ஷிவாங்கி ஜோஷி கூறியுள்ளார்.

மும்பை,

பிரபல சின்னத்திரை நடிகை ஷிவாங்கி ஜோஷி, தனது சருமப் பிரச்சினைகள் பற்றியும் அதனால் எதிர்கொண்ட விமர்சனங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

மற்றவர்களின் வலியை என்னால் உணர முடியும்

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"எனக்கு சிறு வயதிலிருந்தே முகப்பரு மற்றும் சருமப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதனால், யாராவது தங்கள் முகத்தை காட்டத் தயங்கினாலோ அல்லது அதை பற்றி கவலைப்பட்டாலோ அவர்களின் மனநிலையை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடியும். ஆனால், என் முகத்தையும், மேக்கப்பையும் பலர் கேலி செய்வது மிகவும் வேதனையாக இருக்கிறது," என்றார்.

முகப்பரு தழும்புகளால் டிரோல்

சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரான 'யே ரிஷ்தா க்யா கேஹ்லாதா ஹை' (Yeh Rishta Kya Kehlata Hai) தொடரில் நடித்தபோது, அவரது முகத்தில் இருந்த முகப்பரு தழும்புகள் சில காட்சிகளில் தென்பட்டதையடுத்து சமூக வலைதளங்களில் அவர் கடுமையான டிரோல்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானார்.

தோற்றத்தை வைத்து விமர்சிக்க வேண்டாம்

ஒருவரின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விமர்சனங்கள் அவர்களின் மனநிலையை ஆழமாக பாதிக்கக்கூடும் என்பதை தனது அனுபவத்தின் மூலம் ஷிவாங்கி ஜோஷி கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு ரசிகர்கள் மற்றும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.