சினிமா செய்திகள்

தலித் சமூகம் பற்றி அவதூறு: கன்னட நடிகர் உபேந்திரா மன்னிப்பு கோரினார்

தலித் சமூகத்தை பற்றி அவதூறாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் நடிகர் உபேந்திரா பேசியதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா. உத்தம பிரஜாகிய கட்சியின் நிறுவனரான இவர் தனது கட்சி தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் நேரலையில் பேசினார். அதில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக பேசினார். அப்போது தலித் சமூகத்தை பற்றி அவதூறாகவும், இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு எதிராக தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக பெங்களூரு சி.கே.அச்சுகட்டு போலீசில் நடிகர் உபேந்திரா மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் உபேந்திரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் நடிகர் உபேந்திரா, சமூக வலைதள பக்கத்தில் இருந்து நேரலை வீடியோவை நீக்கி உள்ளார். மேலும் அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்