சினிமா செய்திகள்

புற்றுநோய் சிகிச்சை முடிந்து சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பினார்

அமெரிக்காவில் தங்கி பெற்ற சோனாலி பிந்த்ரே சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பி உள்ளார்.

தினத்தந்தி

தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் படங்களில் கதாநாயகியாக நடித்த சோனாலி பிந்த்ரே, இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். 2002ல் இயக்குனரும் தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை திருமணம் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கினார். 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இதற்காக அமெரிக்காவில் தங்கி தலையை மொட்டை அடித்து சிகிச்சை பெற்றார். கீமோ தெரபி சிகிச்சையால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார். தற்போது சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பி உள்ளார். மும்பை புறப்படுவதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை பகிர்ந்தார்.

அதில் என் இதயம் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டு விட்டேன். இந்த உணர்வை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. எனது நண்பர்கள், குடும்பத்தினரை காண ஆர்வமாக இருக்கிறேன். எனது போராட்டம் முழுமையாக தீரவில்லை என்றாலும் சிறிய இடைவெளி கிடைத்து இருப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு இருந்தார்.

நேற்று அதிகாலை விமானம் மூலம் சோனாலி பிந்த்ரே மும்பை வந்தார். கணவர் கோல்டி பெல்லும் உடன் வந்தார். கோல்டி பெல் நிருபர்களிடம் கூறும்போது, சோனாலி பிந்த்ரே உடல் நலம் தேறி வருகிறார். இனிமேல் சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல வேண்டியது இல்லை. வழக்கமான பரிசோதனைகள் செய்து கொண்டால் போதும். சோனாலி திடமான உறுதியான பெண். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு