சினிமா செய்திகள்

திருமணத்திற்குப் பிறகும் டாப் ஹீரோயின் – தீபிகாவின் சம்பளம் அதிரடி உயர்வு!

நடிகை தீபிகா படுகோனே இயக்குனர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சென்னை,

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, தற்போது ஷாருக்கானுடன் இணைந்து 'கிங்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'ராக்கா' படத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.

'

இதற்கிடையில் படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு தரப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அல்லு அர்ஜுனுக்கு ரூ.175 கோடியும், இயக்குனர் அட்லிக்கு ரூ.100 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். தீபிகா படுகோனேவின் சம்பளம் ரூ.25 கோடியாக உயர்ந்திருக்கிறது. ராஷ்மிகாவுக்கு ரூ.8 கோடியும், மிருணாள் தாக்கூருக்கு ரூ.5 கோடியும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாம்.

40 வயதாகும் தீபிகா படுகோனேவின் 'மார்க்கெட்' திருமணத்துக்கு பிறகும் உச்சத்திலேயே இருக்கிறது.

SCROLL FOR NEXT