சினிமா செய்திகள்

மாணவி சோபியா சம்பவம்: நடிகர் சித்தார்த் கருத்து

தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பின்னால் அமர்ந்திருந்த மாணவி சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வந்து இருக்கிறார்.

தினத்தந்தி

சமூக வலைத்தளத்தில் இந்த சம்பவம் சர்ச்சையான விவாதமாக மாறி இருக்கிறது. இது குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் அரசியல்வாதிகளை புகழ்ந்து எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சத்தமாக கோஷங்கள் போட்டு அமைதியை கெடுக்கலாம். சட்டத்துக்கு விரோதமாக சுவரொட்டிகள் ஒட்டலாம். பேனர்கள் வைக்கலாம். மேளதாளங்கள் முழங்கலாம். ஆனால் அவர்களுக்கு எதிராக ஒருவர் விமான நிலையத்தில் கோஷம் போடக்கூடாது.

எதிர் சிந்தனை உள்ளவர்கள் ஏதேனும் முத்திரை குத்தி தடுக்கத்தான் செய்வார்கள். அந்த மாணவியை நக்சல்வாதி, சமூக விரோதி என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். சோபியா சம்பவம் நடந்தது விமான நிலையத்தில் என்றே தெரிகிறது. விமான சேவை நிறுவனமோ, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளோ, இதில் எந்த பிரச்சினையும் செய்ததாக தெரியவில்லை.

இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்