சினிமா செய்திகள்

சின்னத்திரை நடிகர் சாய் சக்தியிடம் பண மோசடி.. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

தன்னிடம் ரூ.4 லட்சம் பண மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் சாய் சக்தி, தனியார் நிறுவனம் ஒன்று தன்னிடம் ரூ.4 லட்சம் பண மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனியார் நிறுவனம் மீது புகார்

நாதஸ்வரம் சீரியல் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் சாய் சக்தி. சென்னையைச் சேர்ந்த இவர் தனியார் நிறுவனம் ஒன்று தன்னிடம் ரூ.4 லட்சம் பண மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மாதம் ரூ.28 ஆயிரம் தருவதாக உறுதி

சாய் சக்தி அளித்துள்ள புகாரில், IFS இன்டர்நேஷனல் பிஸ்னஸ் நிறுவனம் ரூ.4 லட்சம் பணம் வழங்கினால், மாதந்தோறும் ரூ.28 ஆயிரம் வருமானமாக வழங்குவதாக கூறியதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி அவர் அந்த நிறுவனத்திடம் ரூ.4 லட்சம் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

பணம் வழங்காமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

ஆனால், நிறுவனம் உறுதியளித்தபடி மாதந்தோறும் ரூ.28 ஆயிரம் வழங்கவில்லை என்றும், இதன் மூலம் தாம் ஏமாற்றப்பட்டதாகவும் சாய் சக்தி தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தான் வழங்கிய பணத்தையும் திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

போலீசில் நடவடிக்கை கோரிக்கை

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தாம் இழந்த ரூ.4 லட்சம் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என சாய் சக்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.