சினிமா செய்திகள்

விரைவில் தொடங்கும் தனி ஒருவன் 2-ம் பாகம்...!

தனி ஒருவன் 2-ம் பாகம் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் தயாராகி உள்ளனர்

தினத்தந்தி

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படம் 2015-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் நாயகியாக நயன்தாரா வில்லனாக அரவிந்தசாமி நடித்து இருந்தனர்.

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று சில வருடங்களுக்கு முன்பு மோகன்ராஜா தெரிவித்து இருந்தார். அவர் கூறும்போது, "என் வாழ்க்கையில் பெரிய ஆசிர்வாதமாக தனி ஒருவன் படம் அமைந்தது. அடுத்து தனி ஒருவன் 2-ம் பாகம் படத்தை எடுக்க இருக்கிறேன். இது முதல் பாகத்தை விடவும் சிறந்த படமாக இருக்கும்'' என்றார்.

தனி ஒருவன் 2-ம் பாகத்திலும் நானே கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன் என்று ஜெயம்ரவி கூறினார். ஆனாலும் பட வேலைகள் தொடங்காமல் இருந்தது. மோகன்ராஜா, ஜெயம்ரவி இருவருமே வேறு படங்களில் பிசியாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது தனி ஒருவன் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் தயாராகி உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக இருக்கிறது. 

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்