'அப்செஷன்' திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை இண்டே நவரெத், தனது அடுத்த படத்திலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அவர், மீண்டும் அதேபோன்ற குரூரமான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய இண்டே நவரெத், "'அப்செஷன்' திரைப்படம் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்திருந்தாலும், நான் நடித்த கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.
மேலும், "விரைவில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். அதில் நான் ஏற்கும் கதாபாத்திரம் 'அப்செஷன்' படத்தை விட இன்னும் கொடூரமாகவும், பயமுறுத்தும் வகையிலும் இருக்கும். அந்த நடிப்பு ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இண்டே நவரெத்தின் இந்த அறிவிப்பு, அவரது அடுத்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 'அப்செஷன்' படத்தில் அவரது வில்லத்தனமான நடிப்பை ரசித்த ரசிகர்கள், மீண்டும் அதேபோன்ற மிரட்டலான நடிப்பை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.