சினிமா செய்திகள்

விடிய, விடிய ஓடிய சம்பூர்ண ராமாயணம்

தினத்தந்தி

1958-ல் சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் வெளிவந்தது. சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ் ஆகிய இருபெரும் ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். சாதாரணமாக ஒரு படத்திற்கு 13 முதல் 15 ரீல்கள்தான் இருக்கும். சம்பூர்ண ராமாயணத்திற்கு 22 ரீல்கள்.

ஒரு காட்சி முடிய சுமார் 4:30 மணி நேரம் ஆகும். இப்போது பொன்னியின் செல்வன் பெரிய கதை என்பதால் அதை இரண்டு பாகங்களாக எடுக்கிறார்கள். அப்போது எல்லாம் இந்த நடைமுறை இல்லை. அப்படி எடுத்தால் ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு முழுக்கதையும் ஒரே நேரத்தில் சொல்லியாக வேண்டும்.

ராமாயணக் கதையை அப்படி பூரணமாகச் சொன்னதால்தான், படம் 23 ரீல்களாக நீண்டது. இருந்தாலும் ரசிகர்கள் படத்தை ரசித்துப் பார்த்தனர். படத்துக்கு இரு இடைவேளை விடப்பட்டது. படம் வெற்றிகரமாக ஓடியது. வெற்றி விழாவிற்கு சிவாஜி கணேசனும், என்.டி.ராமராவும் தேவி திரையரங்கிற்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு திரையரங்கு சார்பில் மீனாட்சி அம்மன் கோவில் வடிவத்தில் வெள்ளியால் செய்த கலைப்பொருளைக் கொடுத்துக் கவுரவித்தார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு