நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பத்தா திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன் மட்டுமின்றி வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகின்றன. விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பத்தா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘மகளே’ என்ற பாடல் வெளியாகி கவனத்தை பெற்றது. சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய இந்த பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
‘பத்தா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில், விஜய் சேதுபதியின் தோற்றமும் அவரது கதாபாத்திரமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 1980-களில் நடக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது
இந்த நிலையில், இப்படத்தின் 2வது பாடலாக ‘ஜிகுஜிக்கான்’ படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தமிழ் ஆதவன் எழுதி சாய் அபயங்கருடன் இணைந்து பாடியுள்ளார். இப்பாடல், டீசரில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.