சினிமா செய்திகள்

யாஷின் “டாக்சிக்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது.

இதையடுத்து, யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் கதையாக ‘டாக்ஸிக்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகியுள்ளது. கிடைத்த தகவலின்படி, சுமார் ரூ.63 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திலிருந்து இரண்டு டீசர்கள் அடுத்தடுத்து வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. அதில் இடம்பெற்ற அதிரடி மற்றும் வன்முறை காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மதியம் 12:59 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் தபாஹி பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.