சினிமா

‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் புடவையில் நடித்தது புதிய அனுபவம் -அக்‌ஷய்குமார்

‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் புடவையில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது என்று நடிகர் அக்‌ஷய்குமார் கூறினார்.

தினத்தந்தி

லாரன்ஸ் நடித்து இயக்கி திரைக்கு வந்த காஞ்சனா படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் லாரன்ஸ் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். நாயகியாக கியாரா அத்வானி வருகிறார். இந்தி பதிப்பையும் லாரன்சே இயக்கி உள்ளார். இந்த படம் இணைய தளத்தில் வெளியாக உள்ளது. படத்தில் அக்ஷய்குமார் சில காட்சிகளில் புடவை அணிந்து நடித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, புடவை உடுத்தி நடித்தது வித்தியாசமான புதிய அனுபவமாக இருந்தது. புடவை சிறந்த உடை. புடவை அணிந்து பஸ்சில் ஓடிச்சென்று ஏறும் பெண்களையும் ரெயிலில் செல்லும் பெண்களையும் வேலைக்கு செல்லும் பெண்களையும் பார்க்கிறோம். ஆனால் என்னால் புடவையை உடுத்திக்கொண்டு நடக்ககூட முடியவில்லை. புடவை உடுத்தும் பெண்களை வாழ்த்துகிறேன் என்றார்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து