பெங்களூரு

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சாதி அரசியலை கைவிட வேண்டும்: வாட்டாள் நாகராஜ் கோரிக்கை

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சாதி அரசியலை கைவிடவேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

தினத்தந்தி

கொள்ளேகால்:

கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் நேற்று முன்தினம் சாம்ராஜ்நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதும், செல்வந்தர்கள் மேலும், மேலும் பணம் குவிப்பதும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் முரண்பாடான ஆட்சியால் தான். மாநிலத்தில் ஆன்மிக நோக்கத்தில் அரசியலை யாரும் செய்ய வேண்டாம். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளுமே சாதி அரசியலை கைவிட வேண்டும். கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்ய வேண்டும். சாதி, மதம் போன்றவற்றால் அரசியல் செய்வதால்தான் ஒருவரையொருவர் கொலை செய்து வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். மாநிலத்தில் கொலைகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்றால் அனைவரும் சாதி அரசியலை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்