மும்பை

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோர காங்கிரஸ் திட்டம் - இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோர காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இன்று அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

மும்பை, 

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோர காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இன்று அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

உரிமைகோர திட்டம்

மராட்டிய எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாகி உள்ளது. அஜித்பவாருக்கு 35 முதல் 40 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சரத்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என தெரிகிறது. இதேபோல உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர். எனவே சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவர் பதவியை உரிமைகோர காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இதுதொடர்பாக விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் எச்.கே. பாட்டீல் கலந்து கொள்ள உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் சட்டசபை தலைவர் பாலாசாகேப் தோரட் கூறுகையில், " காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோருவது தொடர்பாக விவாதிக்கப்படலாம்" என்றார்.

பிரிதிவிராஜ் சவான் கருத்து

அதே நேரத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஜித்தேந்திர அவாத்தை நியமித்து உள்ளார். எனினும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், " எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் உரிமை கோருவதில் நியாயம் உள்ளது" என கூறியுள்ளார். அதேநேரம் தேசியவாத காங்கிரசுக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்பது தெரிந்த பிறகு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரிதிவிராஜ் சவான் கூறியுள்ளார்.

...........

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு