புதுச்சேரி

மேலும் 4 பேருக்கு கொரோனா

புதுவையில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ள நிலையில் 29 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,220 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 4 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தற்போது புதுச்சேரியில் 13 பேர், ஏனாமில் 16 பேர் என 29 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 91 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 572 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 111 பேரும் செலுத்திக்கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்