புதுச்சேரி

மேலும் 5 பேருக்கு கொரோனா

புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெதுவாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,273 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று 5 பேர் குணமடைந்தனர். தற்போது 16 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 127 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 710 பேரும், 3-வது தவணை தடுப்பூசியை 169 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 8 ஆயிரத்து 594 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை