புதுச்சேரி

பாகூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

புதுவை பாகூர் ஏரியில் கடும் வெயிலால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

தினத்தந்தி

 பாகூர்

புதுவையில் திடீர் மழை, கடும் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொளுத்தும் கடும் வெயிலால் ஏரி, குளங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஒருசில ஏரிகளில் தண்ணீர் குறைந்து குட்டையாக மாறியுள்ளது.

புதுவையின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரியும் கடும் வெயிலால் வேகமாக வறண்டு வருகிறது. இதனால் ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து, கரையோரம் மிதக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இறந்த மீன்களை ஏரியில் இருந்து அகற்றவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?