ஆன்மிகம்

ஆடி மாத வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

நாளை முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் வழக்கமான மாத பூஜை வழிபாடுகள் நடைபெற உள்ளது.

சபரிமலை,

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருவர்கள். இந்த நிலையில், தமிழ் ஆடி மாதம் மற்றும் மலையாள கர்கிடகம் மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் வழக்கமான மாத பூஜை வழிபாடுகள் நடைபெற உள்ளது. சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT