ஆன்மிகம்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆகஸ்ட் 7, 8-ந்தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளுக்காக வரும் ஆகஸ்ட் 7, 8ம் தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட அடர் வனப்பகுதி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆடி அமாவாசைக்குப் பிறகு தூய்மைப் பணிகளுக்காக ஆகஸ்ட் 15, 16-ந்தேதிகளிலும் பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 17-ந்தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.