சபரிமலை,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மற்றும் ஆராட்டு விழாவை முன்னிட்டு, மார்ச் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. மறுநாள் (மார்ச் 23) கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடத்தப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு sabarimala.org.in, தங்கும் அறைகள் முன்பதிவுக்கு www.onlinetdb.com அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.