செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான இன்று, உற்சவ மூர்த்தியான நரசிம்ம பெருமாள் சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து ஏகாந்த சேவையும், மதியம் விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.