திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் 
ஆன்மிகம்

திருச்சானூர்: திருப்பதி தேவஸ்தான கோவில்களில் மே மாதம் நடக்கும் விழாக்கள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே 1-ந்தேதி காலை தங்கத்தேரோட்டம் நடைபெறும்.

திருப்பதி.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மற்றும் துணை கோவில்களில் மே மாத நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே 1, 15, 22, 29-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவங்கள், 1-ந்தேதி காலை 9.30 மணிக்கு தங்கத்தேரோட்டம், 2-ந்தேதி வசந்தோற்சவம் நிறைவடைகிறது. 8-ந்தேதி மாலை 6.45 மணிக்கு கஜ வாகனம் நடக்கிறது.

சுந்தரராஜசாமி கோவிலில் 13-ந்தேதி இரவு 7 மணிக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது. பலராமகிருஷ்ணர் கோவிலில் மே 18-ந்தேதி இரவு 7 மணிக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது.

சூரியநாராயணசாமி கோவிலில் 27-ந்தேதி மாலை 5 மணிக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது. சீனிவாச சுவாமி கோவிலில் 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் காலை 8 மணிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் மே 1, 8, 15, 22, 29-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு வெள்ளிக்கிழமை சேவைகள் நடக்கின்றன. 5-ந்தேதி காலை 8 மணிக்கு அஷ்டதள பாதபத்மாராதனை, 9-ந்தேதி காலை 10.30 மணிக்கு கல்யாண உற்சவம், 13-ந்தேதி காலை 8 மணிக்கு அஷ்டோத்தர கலசாபிஷேகம் நடக்கிறது.

அதேபோல் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் மே 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் காலை 8.15 மணிக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.