செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டின் தெப்ப உற்சவம் கடந்த 1-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி, இன்றுடன் தெப்ப உற்சவம் நிறைவடைகிறது. நாளை தவன உற்சவம் தொடங்குகிறது. மூன்று நாட்கள் இந்த உற்சவம் நடைபெறும். பின்னர் 9ம் தேதி திங்கட்கிழமை தாயார் தவன உற்சமும், 10-ம் தேதி ஆண்டாள் தவன உற்சவமும் நடைபெறுகின்றன.