புதுச்சேரி

குளம், வாய்க்கால் தூர்வாரும் பணி

மணவெளி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதிக்கு உட்பட்ட நல்லவாடு, ஆண்டியார்பாளையம், தவளக்குப்பம், டி.என்.பாளையம் ஆகிய 4 பஞ்சாயத்துகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 21 ஆயிரம் செலவில் குளம், வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணிகளை சபாநாயகர் செல்வம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் ரமேஷ், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்