புதுச்சேரி

வாய்க்கால் தூர்வாரும் பணி

அரியாங்குப்பத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் ரூ.3.68 லட்சத்தில் தூர்வாரி ஆழப்படுத்தவும், அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.2 லட்சத்தில் உறிஞ்சி குழியும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை பாஸ்கர் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை