புதுச்சேரி

சாராயம் குடித்த வாலிபர் மீது தாக்குதல்

திருநள்ளாறு அருகே சாராயம் குடித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

கோட்டுச்சேரி

திருநள்ளாறை அடுத்த நல்லம்பலை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் அங்குள்ள ஒரு சாராயக் கடையில் சாராயம் குடித்துள்ளார். அப்போது அவர் சத்தம் போட்டு பேசியதாக தெரிகிறது. அங்கு கடை வைத்திருந்த அதே ஊரை சேர்ந்த பரமசிவம் என்பவர் தன்னை தான் திட்டுவதாக கூறி பிரசாந்தை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது நண்பர்கள் சுந்தரமூர்த்தி, கிருஷ்ணன் ஆகியோரும் சேர்ந்து பிரசாந்தை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தேனூர் சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவம் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து