கல்வி/வேலைவாய்ப்பு

என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு 2¼ லட்சத்தை தொட்டது

என்ஜினீயரிங் படிப்புக்காக மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. பதிவு ஆரம்பித்ததில் இருந்தே மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் தினமும் குறைந்தது 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 28 ஆயிரம் பேர் வரை இதுவரை விண்ணப்பித்துள்ளனர். நேற்று வரையிலான தகவலின்படி, 2 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருக்கின்றனர்.

விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 404 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 210 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை