சென்னை,
தொழிற் பழகுநர் வாரியத்தின் ஒத்துழைப்புடன் ஒரு வருடகால பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழ்நாடு, பொதுப்பணித்துறை, தொழிற் பழகுநர் வாரியம்(தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய வருடங்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து, பட்டம்/பட்டயம் பெற்ற (CIVIL/ EEE / Arch) மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (BA / BSc / BCom / BBA / BBM / BCA etc) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்றவர்களிடமிருந்து ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (online Application) வரவேற்கப்படுகின்றன.
மேலும், விவரங்களுக்கு http://nats.education.gov.in Go to Home page bottom à Regional Events à Click BOAT(Southern Region) àApprenticeship News. எனும் இணையதள முகவரியினை காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (online Application) பெற கடைசி நாள் 25.06.2026
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.