கல்வி/வேலைவாய்ப்பு

புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இன்போசிஸ் திட்டம்

இந்த நிதியாண்டுக்குள் புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதுமுள்ள பெருநகரங்களில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. இந்தநிலையில் புதிய நிதியாண்டின் (2025-26) முதல் காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) நிதியறிக்கையை இன்போசிஸ் வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் நிகர லாபம் 8.7 சதவீதம் உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 921 கோடியாகவும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 7.5 சதவீதம் உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 279 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்தில் 3 லட்சத்து 24 ஆயிரம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த நிதியாண்டுக்குள் புதிதாக 20 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து