செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அணுசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அணு மின் நிலையத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்: பிட்டர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித்தகுதி: ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 16 வயதுக்கு குறையாதவர்களும் 24 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.9,600 கிடைக்கும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை: டிரேட் டெஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 16.03.2026 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://bhavini.nic.in/upload/files/1771915938_699d4aa2cbb78.pdf