கல்வி&வேலைவாய்ப்பு

மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நார்த்தன் கோல்ஃபீல்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 557 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நார்த்தன் கோல்ஃபீல்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 557 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெலாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: நார்த்தன் கோல்ஃபீல்டு நிறுவனம் (என்.சி.எல்)

காலி பணியிடங்கள்: 557

பதவி: எச்.இ.எம்.எம். ஆபரேட்டர் (டிரெய்னி), பாராமெடிக்கல் ஸ்டாப் மற்றும் மேற்பார்வையாளர் (சிவில்) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள்.

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, டி.ஜி.என்.எம்., டி.பார்ம், டிப்ளமோ.

வயது வரம்பு: 1-5-2026 அன்றைய தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு.

தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01-05-2026

இணையதள முகவரி: http://nclcil.in/data-listing/pages/recruitment