கல்வி/வேலைவாய்ப்பு

திருச்சியில் உள்ள என்.ஐ.டி கல்லூரியில் வேலை: 122 பணியிடங்கள்

உதவி பேராசிரியர் 105, இணை பேராசிரியர் 15, பேராசிரியர் 2 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன.

திருச்சி,

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்: உதவி பேராசிரியர் 105, இணை பேராசிரியர் 15, பேராசிரியர் 2 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: யுஜிசி விதிகளின் படி பேராசிரியர் பதவிகளுக்கான கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும். பி.எச்.டி முடித்து இருப்பது கட்டாயம்

வயது வரம்பு: 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 2500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1250

சம்பளம்: பேராசிரியர் பணிகளுக்கு ரூ.56,100- 1,77,500 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.04.2026

தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.nitt.edu/home/other/jobs/faculty_recruitment_2026/