கல்வி/வேலைவாய்ப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி: உடனே விண்ணப்பிங்க

கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்கள் வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பின்படி, இப்பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி)

காலி பணி இடங்கள்: 2,147

பதவி: துணை செவிலியர் / கிராம சுகாதார செவிலியர் பதவிகள்

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்படும் இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (எம்.பி.எச்.டபிள்யூ-பெண்) பயிற்சிப் படிப்பு, துணை செவிலியர் மருத்துவச்சி (ஏ.என்.எம்.) பயிற்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-12-2025

இணையதள முகவரி: https://www.mrb.tn.gov.in/notifications.html

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து