கல்வி/வேலைவாய்ப்பு

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.

தினத்தந்தி

சென்னை,

பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி ஆரம்பித்து 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான தேர்வை மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில், அதற்கான விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க இருக்கின்றன. வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) பணிகள் நடைபெற உள்ளன.

இதற்காக மாநிலம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாகவும், விடைத்தாள் திருத்தும் பணி முடிய முடிய மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி, மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடப்பதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து