கல்வி/வேலைவாய்ப்பு

இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு: தேர்வர்களின் மதிப்பெண் வெளியீடு

போட்டித் தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு (2024) ஜூலை மாதம் 21-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 25 ஆயிரத்து 319 பேர் எழுதினார்கள்.

தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் கடந்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி வெளியானது. தற்காலிக விடைகள் மீது ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதுகுறித்து இணையவழியில் முறையிட தேர்வர்களுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பெறப்பட்ட ஆட்சேபணைகள் பாடவாரியாக வல்லுனர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் பரிந்துரைத்த இறுதி விடைக்குறிப்புகளின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

தற்போது பகுதி பி-யில் தமிழ்மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளை எழுதிய அனைத்து தேர்வர்களின் மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புகள் www.trb.tn.gov.in ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து