கல்வி/வேலைவாய்ப்பு

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது. அதேபோல், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இளநிலை பட்டப்படிப்பு முடித்த அல்லது இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு துறை செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து