கல்வி/வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி 2026-ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை வெளியீடு

குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு(2026) அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) செய்து வருகிறது. அதன்படி, குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 2026-ம் ஆண்டுக்கான அட்டவணையை https://tnpsc.gov.in/english/annual_planner.html என்ற இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. இன்று வெளியிட்டு இருக்கிறது.

அதில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு(2026) மே மாதம் 20-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 3-ந்தேதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு செப்டம்பர் 6-ந்தேதியும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 11-ந்தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 25-ந்தேதி தேர்வு நடத்தப்படும். அதிகம் பேர் விண்ணப்பிக்கக் கூடிய குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் 6-ந்தேதி வெளியாகிறது. தேர்வு டிசம்பர் 20-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இதேபோல், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பு வெளியிடும் போது தெரிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை