கல்வி/வேலைவாய்ப்பு

குரூப்- 4;கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு

குரூப்- 4 ல் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கிய மொத்தம் 9 ஆயிரத்து 491 பணி இடங்களுக்கான குரூப்-4 போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடத்தப்பட்டது. தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள், கடந்த அக்டோபர் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கணினி வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வானவர்கள் பட்டியலை கடந்த 7-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனர். இந்த நிலையில், குரூப்-4 தேர்வுகளுக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி, 'எக்ஸ்' சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகியது.

இந்நிலையில் குரூப்-4 ல் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதனுடன் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து